Posts

பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்

Image
கொல்கத்தா: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜொமாட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தங்களது நிறுவன டீ சர்ட்டை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு சீன நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் பினான்சியல் என்ற நிறுவனம் ஜொமாட்டோவில் 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது. மேலும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யுமாறு ஆன்ட் நிறுவனத்தை ஜொமாட்டோ கேட்டுக் கொண்டது. வீரமரணம் இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு அருகே அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் இந்தியா கொடுத்த பதிலடியால் சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முதலீடு இதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என இந்திய மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீன நிறுவனத்திடமிருந்து முதலீட்டு பெறும் ஜொமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொல்...

சாத்தான்குளம் துயரம் 2 பேர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் போர்கொடி

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தேசிய அவமானம் என்றும் காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியும் ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.திரைப்பட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். உலக அளவில் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ்,பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19ஆம் தேதி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர். அங்கு நடந்த வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். வியாபாரிகள் மரணம் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. நிவாரணமும், அரசு வேலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அரசு குற்றம் செய்த காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவா...